October 26, 2021

காதில் விழும் கதைகள்

காதில் விழும் கதைகள்
தமாம் பாலா

பிரபஞ்சம் உங்களிடம் பேசி இருக்கிறதா? கதை சொல்லி இருக்கிறதா? என்னிடம் சொல்கிறது.

நான் எதிர்கொள்ளும் மனிதர்கள் ஏன் பூனை நாய் கூட தங்களது கதையை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளனர். நாம் தான் 'சாரி நான் ரொம்ப பிசி' என்று அவர்களை வெட்டி விடுகிறோம்.

மலேசியா தமிழ் நண்பர் ஒருவர் எனக்கு சைகானில் பழக்கம், அவர் சொன்ன ஒரு கதை இது.

மலேசியாவுக்கு ஒரு செட்டியார் தமிழ்நாட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்து விட்டாராம், மனைவியை பிரிந்து. 35 வருடம் இந்தியாவுக்கே போகவில்லையாம். மலேசியாவில் உழைத்து வணிகம் செய்து வீடுவாசல் என்று நல்ல வசதியாம். நம்ம மலேசியா தம்பி செட்டியாருக்கு வயிற்றில் பிறக்காத செல்லப்பிள்ளை. நல்ல அன்னியோனியம் அவர்கள் இடையே. 

இது ரொம்பவும் பழைய கதை, பின்னாளில் செட்டியாருக்கு இனிப்பு நோய் காரணமாக ஒரு காலை வெட்டியதும், பின்னர் தமிழ்நாட்டில் இருந்து அவர் மனைவி வந்து அவருடன் மலேசியாவில் சேர்ந்து கொண்டதும் நடந்த கதை. செட்டியார் இப்போது இல்லை, அவர் காலமாகி பல வருடங்கள் ஆகி விட்டது.

இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்பார்கள். வாழ்க்கையில் நடக்கும் கதைகள் சினிமா போலவே சுவாரஸ்யமானவை என்பது என் எண்ணம், அனுமானம். உங்கள் கதை எப்படியோ அது எனக்குத் தெரியாது.

கதை தொடரும்
தமாம் பாலா 23.09.2021 வியட்நாம்

No comments: