May 23, 2020

மாயமானது

மாயமானது
தமாம் பாலா

மாயமான் அது மண்ணில்
தோன்றிய மங்கையையே
மயக்கியதாம் அரண்மனை
தயக்கமின்றி துறந்தவளாம்

காட்டில் கல்லில் முள்ளில்
குடிலில் குறைவான வசதி
வாய்ப்பில் நிறைந்த மனம்
வாய்த்த சீதையை மட்டும்

ஏன் விட்டு வைக்கவென்று
மாயமானாகி மாயமானது
மான்விழியாள் கண்ணில்
பட்டது பத்து தலையோன்

சதியால் விளைந்திடினும்
மதியோன் ராமபிரானும்
தம்பியும் விதி வசப்பட்டு
ராமாயணமானது கதை