March 17, 2019

சொல்லும் செயலும் - திருந்திய பதிப்பு

சொல்லும் செயலும்
திருத்திய பதிப்பு
(தமாம் பாலா)

அம்மா  சொன்னாள் கண்ணா
சின்னவன் உனக்கு பொம்மை
வாங்கித் தருவேன் நீ வளர்ந்திட

விண்ணுயரக் கல்வி தருவேன்
தின்ன தினம் அறுசுவை உணவு
தருவேன் இன்னும் பல செல்வம்

தருவேன் உனக்கும் பொன் நிகர்
பெண்ணை மணமுடித்திடுவேன்
சொல்லிய வண்ணம் செய்தாள்

கண்ணன் அன்றே சொன்னான்
அம்மா நான் அன்பைத் தருவேன்
உனக்கு வீடு தருவேன் வாகனம்

தருவேன் அவையில் பெருமை
தருவேன் மகிழ்ச்சியும் தருவேன்
மரியாதை தருவேன் கண்ணன்

சொல்லிய வண்ணம் செய்தான்
கண்ணன் சொல்லாதது என்ன?
இவை என் திருமணத்திற்கு முன்

என் திருமணத்திற்கு பின் நான்
உனக்கு  "முதியோர் இல்லத்தில்"
ஒரு இடம் வாங்கித் தருவேன் என

கண்ணன் சொல்லாமல் செய்தான்
நம்மால் சொல்வதை செய்வதற்கு 
இயன்றாலும் செய்ய முடிவதை

சொல்ல முடிவதில்லை எதையும்
செய்வதற்கு கூச்சமே இல்லை
சொல்வதற்குத் தான் கூச்சமும்

அப்பா பாட்டி இருக்கின்ற அந்த
அறை உனக்குத் தானே என்ற
அன்பு மகன் சொல் கேட்டதும்

வந்தது அறிவு கண்ணனுக்கு
அன்னையை மீட்டு வந்தான்
சொன்னது உண்மைக் கதை