விகாரி வாழ்த்து
கூரிய வில் அம்பு போல
கூறிய சொற்கள் போல
ஒருவழிப் பாதை செல்ல
ஒரு வருடம் முடிகின்றது
விளம்பி கிளம்பி விட்டது
விகாரியும் வந்து விட்டது
விடியும் நாளை பொழுது
விலங்குகளை உடைத்து
வெற்றிகளைக் குவித்து
பெற்ற நன்மை அறிந்து
உற்ற நட்பில் திளைத்து
ஏற்றமே தரட்டும் சிறந்து