கொடுப்பினை
தமாம் பாலா
நல்வினையால் எப்போதும்
நன்மையே விளையும் எனும்
நம்பிக்கை உண்டு ஒருபுறம்
ஊழ்வினையால் வாழ்க்கை
பாழ்படவும் நேரும் என்பதும்
ஆழ்மன எண்ணம் மறுபுறம்
செய் வினை கொள் வினை
செல்வத்தின் அடிப்படையில்
பல்கிப் பெருகிடும் வரையில்
அவ்வியான் ஆக்கமும் நல்ல
செவ்வியான் கேடும் தேடும்
பவ்வியமாய் காரணங்களை
உழைப்பினை மூலதனமாக்கி
இழைத்து இரவு பகல் பாராது
அழைத்த குரலுக்கு ஆதரவுக்
கரம் நீட்டும் கரும வீரருக்கும்
நிரந்தர சிரமமும் ஏது அவரது
பரந்த மனமே கொடுப்பினை