December 9, 2018

கொடுப்பினை

கொடுப்பினை
தமாம் பாலா

நல்வினையால் எப்போதும்
நன்மையே விளையும் எனும்
நம்பிக்கை உண்டு ஒருபுறம்

ஊழ்வினையால் வாழ்க்கை
பாழ்படவும் நேரும் என்பதும்
ஆழ்மன எண்ணம் மறுபுறம்

செய் வினை கொள் வினை
செல்வத்தின் அடிப்படையில்
பல்கிப் பெருகிடும் வரையில்

அவ்வியான் ஆக்கமும் நல்ல
செவ்வியான் கேடும் தேடும்
பவ்வியமாய் காரணங்களை

உழைப்பினை மூலதனமாக்கி
இழைத்து இரவு பகல் பாராது
அழைத்த குரலுக்கு ஆதரவுக்

கரம் நீட்டும் கரும வீரருக்கும்
நிரந்தர சிரமமும் ஏது அவரது
பரந்த மனமே கொடுப்பினை