குரல்
தமாம் பாலா
இனிய குரல் சிலருக்கு
இளமையான குரலுக்கு
சொந்தக்காரரும் உண்டு
சொல்வதை நல்லதாய்
அன்பாய் பண்பாய் அவர்
உன்னிடம் சொன்னால்
நரகத்துக்குக் கூட நீயும்
நகைத்தவாறு செல்வாய்
அன்பின் குரல் கொடுத்திட
அதிகாரத்தின் குரலுடனே
அகம்பாவத்தின் குரலும்
ஆணவத்தின் குரல்களும்
அடக்கி ஆள முயல்கின்றன
அது கொஞ்சகாலம் தானே
எங்கெல்லாம் நேர்மையின்
குரல் நசுக்கப்படுகிறதோ
அங்கே அமைதியாய் இராது
சங்கே முழங்கு சமுதாயமே
கொஞ்சமாய் குரல் கொடு
அஞ்சாதே எது நிரந்தரம்?