ஆண்கள் அழுவதில்லை
தமாம் பாலா
சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என்றார்
உண்மையோ பொய்யோ
முட்டி மோதி முன்னுக்கு
வருவதை பிறக்கும் முன்
கற்றவன் இவன் கர்மவீரன்
படித்து முடித்து முடிக்காமல்
துடிப்பாக தொழில் செய்தும்
மடிப்பு கலைந்த உடையுடன்
இரவுபகலாய் உழைத்து தன்
உறவுகளை உயர்த்துவான்
மறந்தும் தன் துன்பங்களை
எண்ணி ஆண் அழுவதில்லை
கண்ணீரும் வியர்வையும் கூட
தண்ணீரில் கலந்த மீன் போல
எத்தனை அடித்தாலும் தாங்கும்
வித்தகன் இவனே தாங்குவான்
சத்தமில்லாத அவமானங்களை
உவர் நீர் குடித்து வளர்ந்து
இனிப்பு நீர் தரும் தென்னை
ஆண்களில் தான் எத்தனை
ஆண்களுக்கு அங்கீகாரம்
அது தேவையில்லை துளி
அன்பும் பாசமும் போதுமே
No comments:
Post a Comment