பீடம்
தமாம் பாலா
கால புருஷ தத்துவத்தில்
சில கிரகங்கள் சுபர்கள்
பல கிரகங்கள் அசுபர்கள்
அல்லது பாபர்கள் என்பர்
நல்லாட்சி தந்த அரசர்கள்
வெல்ல முடியாத வீரர்கள்
கோயில் கொண்ட நாட்டில்
துயிலும் தெய்வங்களும்
மயில் வாகனம் கொண்ட
ஆறுமுகனும் உண்டு தன்
திருமுகம் காட்டாத லிங்க
திருமேனியும் அதன் பின்
உருவம் துறந்த அருவமாய்
துருவம் வடக்கு தெற்காய்
ஒரு இறைமார்க்கம் உண்டு
திரை போட்டு பீடம் வைத்து
கூரை கட்டி சுவரும் எழுப்பி
ஊரைக் கூட்டி வழிபட்டார்
தழை தின்பவரை அழித்து
ஆடு தின்பவர் சில நாளும்
மாடு தின்பவர் பல நாளும்
மாறிமாறி ஆண்டார் பீடம்
ஏறிய சிலைகளை அவரது
கூரிய உளியால் சிதைத்து
சுபர் வீட்டினை அசுபர் பாபர்
அபகரித்து அன்று கட்டினார்
கோபுரம் என்று சொன்னார்
கண்முன்னே இடித்திட்டவர்
கண்ணியவானே என்றார்
கட்டிக் கொள்ளவும் தந்தார்
அனுமதி ஆலயத்துக்காக
மனுதர்மம் பேசும் நாட்டில்
புனுகு பூசியது அயோத்தி
No comments:
Post a Comment