November 12, 2019

பீடம்

பீடம்
தமாம் பாலா

கால புருஷ தத்துவத்தில்
சில கிரகங்கள் சுபர்கள்
பல கிரகங்கள் அசுபர்கள்

அல்லது பாபர்கள் என்பர்
நல்லாட்சி தந்த அரசர்கள்
வெல்ல முடியாத வீரர்கள்

கோயில் கொண்ட நாட்டில்
துயிலும் தெய்வங்களும்
மயில் வாகனம் கொண்ட

ஆறுமுகனும் உண்டு தன்
திருமுகம் காட்டாத லிங்க
திருமேனியும் அதன் பின்

உருவம் துறந்த அருவமாய்
துருவம் வடக்கு தெற்காய்
ஒரு இறைமார்க்கம் உண்டு

திரை போட்டு பீடம் வைத்து
கூரை கட்டி சுவரும் எழுப்பி
ஊரைக் கூட்டி வழிபட்டார்

தழை தின்பவரை அழித்து
ஆடு தின்பவர் சில நாளும்
மாடு தின்பவர் பல நாளும்

மாறிமாறி ஆண்டார் பீடம்
ஏறிய சிலைகளை அவரது
கூரிய உளியால் சிதைத்து

சுபர் வீட்டினை அசுபர் பாபர்
அபகரித்து அன்று கட்டினார்
கோபுரம் என்று சொன்னார்

கண்முன்னே இடித்திட்டவர்
கண்ணியவானே என்றார்
கட்டிக் கொள்ளவும் தந்தார்

அனுமதி ஆலயத்துக்காக
மனுதர்மம் பேசும் நாட்டில்
புனுகு பூசியது அயோத்தி

No comments: