கடற்கரை மணலில்
தமாம் பாலா
சுடும் வெண்மணலும் கூட
பாடும் கடலலைகளும் ஆட
படுத்திருக்கிறேன் நானும்
அடுத்ததோர் குடைநிழலில்
ஆடாமல் அசையாமல் நான்
தேடாமலே குழந்தைகளின்
கிரீச்சிட்ட குரல் கேட்கிறேன்
கிடந்த கடற்கரை மணலில்
விரிந்த கரைக்கு அப்பால்
துரித கதியில் சுழலுகின்ற
பெரிய உலகம் லாப நட்டம்
தெரிந்த முதலீடும் செய்ய
இரு வேறு உலகங்களிலே
இதுவா அல்லது அதுவா
எது நிஜம் என்பது கேள்வி
எருது பூட்டி உழுது உணவு
தேடுவதா திரைகடலுக்குள்
மீண்டு செல்லும் அலைகள்
கண்டு காலம் நேரத்தினை
தாண்டி லயித்து மகிழ்வதா
நிலம் தொடும் கடலின் முன்
பலபல மணல் கோட்டைகள்
சில காலம் கட்டினேன் நான்
பொலபொலவென உதிரவே