December 8, 2020

கடற்கரை மணலில்

கடற்கரை மணலில்
தமாம் பாலா

சுடும் வெண்மணலும் கூட
பாடும் கடலலைகளும் ஆட
படுத்திருக்கிறேன் நானும்
அடுத்ததோர் குடைநிழலில்

ஆடாமல் அசையாமல் நான்
தேடாமலே குழந்தைகளின்
கிரீச்சிட்ட குரல் கேட்கிறேன்
கிடந்த கடற்கரை மணலில்

விரிந்த கரைக்கு அப்பால்
துரித கதியில் சுழலுகின்ற
பெரிய உலகம் லாப நட்டம்
தெரிந்த முதலீடும் செய்ய

இரு வேறு உலகங்களிலே
இதுவா அல்லது அதுவா
எது நிஜம் என்பது கேள்வி
எருது பூட்டி உழுது உணவு

தேடுவதா திரைகடலுக்குள் 
மீண்டு செல்லும் அலைகள்
கண்டு காலம் நேரத்தினை
தாண்டி லயித்து மகிழ்வதா

நிலம் தொடும் கடலின் முன்
பலபல மணல் கோட்டைகள்
சில காலம் கட்டினேன் நான்
பொலபொலவென உதிரவே