காலையில் பிள்ளையார்
கோயிலில் பூசை செய்து
மாலையில் ஆஞ்சநேயர்
கோயிலில் வடைமாலை
சார்த்தியும் குடும்பத்தில்
பார்க்கவே முடியவில்லை
நிம்மதி மகிழ்ச்சி சிரிப்பை
வெகுமதி நல்வளர்ச்சியை
வேண்டும் தெய்வங்களின்
சுயவிபரம் வரசித்தி படித்து
வட இந்திய சாய்பாபாவை
திடமாக நம்பினேன் ரொம்ப
காலம் பலன் தந்த பாபாவும்
ஆலகால கோவிட் வந்தபின்
சீலம் குறைந்து போனாரோ
மேல வீதி ராமரைப் பார்த்து
நாலு கேள்வி நறுக்கென்று
நானும் கேட்டிடலாம் என்று
எட்டி நடை போட்டேன் என்
எதிரில் வந்தார் கறுப்பில்
சட்டை போட்டு கண்சிவந்த
குட்டைத் தோழர் ஒருவரும்
கடவுள் இல்லை இல்லவே
இல்லை பகுத்தறி என்றார்
அறிவில் உண்டோ பகுத்த
மற்றும் பகுக்காததும் சுட்ட
பழம் சுடாத பழம் போலவும்
பழனியப்பன் ஔவையின்
உரையாடல் போல கடவுள்
இல்லை என்பதை கடவுள்
கோயிலில் மட்டும் இல்லை
சிலையினுள் ஒளிந்திடவும்
இல்லை என்றும் நம்பிக்கை
மூடம் ஆகும்போது மனிதன்
முடம் ஆகிறான் சொன்னது
கடவுள் மறுப்பின் பெரியார்
கடவுள் மறுப்பு மனிதத்தின்
திடமான ஏற்பு உனக்குமுன்
உள்ள மனிதனை நம்பாமல்
உள்ளத்தில் உள்ளதாக ஒரு
இறையை நம்புகின்றாயோ
திரையை செலுத்துவாயோ
திரை விலக்கி தரை பார்க்க
விரைவில் வரும் பகுத்தறிவு