எத்தனையோ ஆண்டுகள்
புத்தகங்களைத் படித்தேன்
மதிப்பெண் மூலம் எனது
விதிப்பயன் மாற்றினேன்
வாழ்க்கையெனும் புத்தகம்
வாழ்ந்து பார் நீயும் என்றது
அதில் ஒரு பக்கம் முடிந்து
அடுத்த பக்கம் தொடங்குது
இறைவன் என் பக்கமா என
இன்னொரு பக்கம் தேடும்
இனிய பொழுதிலே வந்த
இந்த சிந்தனையும் தந்தது
படிப்பினை புத்தகம் மட்டும்
படித்தால் போதாது மனிதம்
படித்து உணர்தல் வேண்டும்
படிப்படியாய் பணி செய்திட
மனிதர் என் பக்கம் இருக்க
இனி நான் அவரை மட்டுமே
புனித நூலாய் படித்திருக்க
கனிந்தது காலம் இப்போது
No comments:
Post a Comment