October 17, 2021

சக்திப்புள்ளி

சக்திப்புள்ளி
தமாம் பாலா

தெருக்கூத்து வைத்தார்
பார்த்தோம்
நாடகம் போட்டார்
கை தட்டினோம்

சினிமா காட்டினார்
விசிலடித்தோம்
பற்றாக்குறைக்கு 
பால் வார்த்தோம்.

வானொலியில் பேசினார்
விடிய விடிய 
கேட்டோம்

தொலைக்காட்சி பார்த்து
தொலைந்து போனோம்
காட்சிக்காக
கண்ணீருக்கு
காசுகொடுத்தோம்.

கண்டதை அருந்தி
கண் அவிந்து போகாதேயென
அதையும் தரமாக தந்தார் 
பெற்று மகிழ்ந்தோம்

இணையத்தில்,
புலனத்தில்
யார் எழுதியதென்று
தெரியாமல்
முன்னேற்றி மூழ்கினோம்.

இன்று 
திடீரென வந்துனின்று
உன்னை வளர்த்து
உயர்த்திப் பிடித்த
அன்னை தந்தை பற்றி
பெருமை கொள்ள
சொந்தமாய் எழுது
சக்திப் புள்ளி செய் 
அதை
சபையில் பேசு என்றால்
எங்கே செல்வோம் நாம்
என்ன செய்வோம்?

No comments: