அதுவும் நானும்
தமாம் பாலா
இந்த மதத்தில்
வந்து பிறந்தாய் ஆகமம்
அல்லது கிராமத்து தேவதை
தருகிறோம்
பெற்றுக்கொள் என்றார்
அந்த மதத்தில்
அஞ்சு முறை வெள்ளி
அல்லது
ஞாயிறு காலை ஆங்கில
முறைப்படி என்றார்
உருவ அருவ
சிங்க வானர வராகம்
எல்லாம் ஒரு சுழற்சியில்
கண்டு
இன்று கறுப்பணிந்து
கண்ணாடியில்
பார்த்து பகுத்தறிந்தேன்
அதை
No comments:
Post a Comment