முட்டையை அடைகாத்து
முழுக்குஞ்சாக பெறுவது
பறவையின் குணமாகும்
பிறவியில் மனிதனாகும்
குழந்தையை தன்னுள்ளே
வழக்கமாய் பத்துமாதமும்
சுமப்பாள் தாய் அதன்பின்
சுமை கை மாறும் தந்தை
மனதில் சேரும் ஆயுளுக்கு
தினமும் உழைத்து மகவை
முன்னேற்றப் பாதையிலே
முடுக்கி விடும் பயணமும்
சுதந்திரக்காற்றை சுவாசி
முதலில் அதன்பின் நான்கு
சுவருக்குள்ளே அடைப்பார்
அவர் உன்னை பள்ளியில்
எல்லா திசைகளிலும் உன்
நில்லாமல் செல்லும் சுய
சிந்தனைகளை கடிவாளம்
தந்து கட்டிப் போடும் காலம்
நினைத்ததை அடைவதே
பனையளவு வெற்றியாகும்
அடைமழையில் நனைந்து
அதில் மனம் கரைகின்ற
சுகமாய் அடைபடாத இன்ப
சுதந்திரம் அடைவதே நமது
மதமாய் ஏற்றுக்கொள்வீர்
அதன் பெயர் எதுவாயினும்
No comments:
Post a Comment