August 28, 2021

வல்வில் ஓரி

வல்வில் ஓரி
தமாம் பாலா

மழை போர்த்திய மலையோன்
இழை போர்த்திய யானையை
கழலணிந்த கரங்களால் தரும்

போரில் வெல்ல முடியாத ஓரி
மாரி போல் வாரி வழங்குதல்
கோரிச் சென்றவர் மகிழ்ந்திட

வாசமிகு மலர் மாலைகளை
விலைமிகு ஆபரணங்களை
பாசமிகுந்து பரிசிலளித்திட

பெற்றவர் பசிபிணி மறந்தார்
மற்ற தம் ஆடல் பாடல் கலை
கற்றதும் துறந்த வன்பரணன்

No comments: