வல்வில் ஓரி
தமாம் பாலா
மழை போர்த்திய மலையோன்
இழை போர்த்திய யானையை
கழலணிந்த கரங்களால் தரும்
போரில் வெல்ல முடியாத ஓரி
மாரி போல் வாரி வழங்குதல்
கோரிச் சென்றவர் மகிழ்ந்திட
வாசமிகு மலர் மாலைகளை
விலைமிகு ஆபரணங்களை
பாசமிகுந்து பரிசிலளித்திட
பெற்றவர் பசிபிணி மறந்தார்
மற்ற தம் ஆடல் பாடல் கலை
கற்றதும் துறந்த வன்பரணன்
No comments:
Post a Comment