வலதுகையால் கொடு
வாங்கு அதுதான் சரி
வழக்கமாய் சொல்வது
உன் கை தொட்டாலது
உகந்தது கால் பட்டால்
உண்டாகும் பாவம் என
கையை உயர்த்தி உன்
காலைத் தாழ்த்தினார்
உடலின் மேல்புறத்தில்
இருப்பதாலே கைகள்
இருகால்களை விடவும்
பெருமை கொள்வதோ
கொடுக்கும் இடதுகை
கெடுக்கும் வலதுக்கு
தூய்மையான பாதம்
கறைபடிந்த கரத்துக்கு
அரைமடங்கு மேல் என
திரைவிலக்கிப் பார்க்க
வலதுகை இல்லாவிடில்
இடதே வலதாக ஆகிடும்
இருகை இல்லாதவனின்
கால்களே கையாய் மாறி
கடமையை ஆற்றுவதும்
காலத்தின் கட்டாயமாகும்
உடுக்கை ஒலிக்காவிடில்
இடக்கை ஒலியுடன் கூடி
இசைக் கச்சேரி நடக்கும்
No comments:
Post a Comment