May 26, 2018

யாரும் போகாத பாதை

யாரும் போகாத பாதை
(தமாம் பாலா)

மஞ்சள் பூத்த கானகத்தில்
மண் பாதைகள் பிரிந்தன
இரண்டாய் இடதா வலதா
இதில் எனது பாதையென

மரங்களுக்குள்ளே சென்று
மறையும் பாதைகள் ஊடே
பார்த்த போது இடது பாதை
பாதம் பல பட்ட தடத்துடனும்

வலது பாதை புல் மண்டியே
வசப்படாத இயற்கையோடு
புது வாசனை மாறாதிருக்க
புரிதல் எனக்குள் முளைக்க

எல்லோரும் போகும் பாதை
எழுதியெழுதி சலித்த கதை
யாரும் போகாத ஒரு பாதை
யான் தெரிவு செய்த பாதை

நல்லூர் சென்று சேர்க்குமோ
இல்லை முன் வைத்த காலை
பின் வைக்க நேருமோ என்ற
பிரச்சினை எதிர் கொள்ளும்

தீரம் தருமே வெற்றி உயர்வு
காலம் காலமாய் ஒரு தேர்வு
காட்டில் பிரிகின்ற இரு வழி
காட்டுவோம் நடந்து நம் வழி

(நன்றி: The Road Not Taken BY ROBERT FROST)

No comments: