May 25, 2018

பருந்தின் உறக்கம்

பருந்தின் உறக்கம்
(தமாம் பாலா)

உயர்ந்த மரத்தின்  உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்
சிறிதும் ஆடாது அசையாது
கண்களை மூடியபடியே

எனது வளைந்த அலகுக்கும்
கூர் நகங்களுக்கும் நடுவில்
பொய்க் கனவுகள் இல்லை
தேர்ந்த வேட்டைக்கான ஒரு
தேடுதல் ஒத்திகை மட்டுமே

விருட்சத்தின் வசதி உயரம்
தாங்கிப் பிடிக்கும் காற்றும்
தழுவிச் செல்லும் கதிரொளி
இயற்கை தந்த நற்கொடை

என் கண்காணிப்பில் உள்ள
பூமியின் முகம் அது என்னை
அண்ணார்ந்து பார்த்திருக்க
காய்ந்த மரத்தின் கிளையை
இறுகக் கவ்விப் பிடித்த என்
முரட்டுக் கால்கள் இரண்டு

படைத்தல் முழுமை பெற்றது
எனது பாதம் இறகும் செய்து
அந்த படைத்தலையே இன்று
எனது காலடியில் வைத்தேன்

உயர உயர எழும்பிப் பறந்து
ஆர அமர காற்றில் சுழன்று
நின்று நிதானமாகச் சென்று
கொல்லுவதே என் விருப்பம்

இங்கு அனைத்தும் எனக்கு
சொந்தமானது என்பதனால்
பாசாங்குகள் எதுவுமில்லை
என்னுடைய உடல்மொழியில்

மண்டைகளைக் ஒரே குத்தில்
கிழித்தல் எனது எளிய பாணி
நேர்க்கோட்டில் அம்பாய் பறந்து
உயிர்களின் எலும்பைப் பிளந்து
மரணத்தை பரிசளிக்கும் எனது
உரிமைக்கு மறு பேச்சும் ஏது?

சூரியன் என்றும் என் பின் நிற்க
நான் தோன்றியது முதற்கொண்டு
எதிலும் எந்த மாற்றமும் கிடையாது
அதை என் கண்ணும் அனுமதியாது
சகலமும் இங்கு என் கைப்பிடியில்!

(நன்றி: Hawk Roosting by Ted Hughes)

No comments: