March 8, 2020

உலக மகளிர் தினம்

பெண்
தமாம் பாலா

மகளாய் பிறந்தாள் அக்கா 
தங்கையாய் வளர்ந்தாள் 
அவள் மாணவியாய் முதல்
மதிப்பெண்களும் எடுத்தாள் 
பாரதி கண்ட புதுமைப்பெண்
இவளோ என்று எண்ணிடவும்
காதலியாய் மகிழ்ந்தாள் தன்
மனம் கவர்ந்தவன் கைபிடித்து
மனைவியாய் ஆனாள் பேனா
பிடித்தவள் கையில் கரண்டி
அம்மாவாய் ஆனாள் தனது
தொலைந்த கனவுகளை தன்
பிள்ளைகளில் விதைத்தாள்
பெண் என்பது வெறும் உடல்
அல்ல அது ஆத்மாவின் குரல்

No comments: