பெண்
தமாம் பாலா
மகளாய் பிறந்தாள் அக்கா
தங்கையாய் வளர்ந்தாள்
அவள் மாணவியாய் முதல்
மதிப்பெண்களும் எடுத்தாள்
பாரதி கண்ட புதுமைப்பெண்
இவளோ என்று எண்ணிடவும்
காதலியாய் மகிழ்ந்தாள் தன்
மனம் கவர்ந்தவன் கைபிடித்து
மனைவியாய் ஆனாள் பேனா
பிடித்தவள் கையில் கரண்டி
அம்மாவாய் ஆனாள் தனது
தொலைந்த கனவுகளை தன்
பிள்ளைகளில் விதைத்தாள்
பெண் என்பது வெறும் உடல்
அல்ல அது ஆத்மாவின் குரல்
No comments:
Post a Comment