March 11, 2020

செருப்பு

செருப்பு
தமாம் பாலா

புது செருப்பு வாங்கினவன், புது பொண்டாட்டி கட்டினவன் மன நிலை கிட்டத்தட்ட ஒன்றுதான். யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களா என்ற அச்சம் தூக்கத்திலும் துரத்தும்.

கோயிலுக்கு போனா செருப்பு கவுண்டரில் வைக்கலாம். ரூ 1 அல்லது 2 போதும். கல்யாண வீட்டுல என்ன பண்றது?? இப்போ எல்லாம் பரவாயில்ல சில இடங்களில் செருப்புக்கு தடா இல்லை.

நிறைய புது செருப்பு தொலைச்ச அனுபவத்தில், செருப்பை தொலைக்காமல் இருப்பது எப்படி என்ற தலைப்பில் பி.ஹெச்.டி படிப்பில் பதிவு பண்ணி இருக்கிறேன். 2030க்குள் முடிச்சிடலாம்.

மகாபாரதத்தில் எனக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. பீமன் ஜராசந்தன் போர் கதையிலே. எப்போது கிழித்து போட்டாலும் இணைந்திடுவான் ஜராசந்தன். பீமனும் சளைத்திடுவான். அப்போ கிருஷ்ண பரமாத்மா ஒரு ஓலையை கிழித்து கையை இடம் வலமாய் மாற்றி போடுவார். பீமனும் அதை பின்பற்றிட ஜராசந்தன் க்ளோஸ்.

செருப்பை ஒன்றை மண்டபத்து வாசல் இடது கோடியிலும், இன்னொன்றை வலது கோடியிலும் போடுப் பாருங்க, அப்புறம் கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் (புது) செருப்புதான் !!!

No comments: