August 10, 2008

'தல'விதி

'தல'விதி
(தமாம் பாலா)

கருமம் புடிச்ச அந்த களுதைங்க
காம வெறி புடிச்ச களுசடைங்க
மனோகரு நம்பியாரு அசோகனு
மறுபடியும் மறுபடியும் பொண்ண



மறிச்சு கற்ப அழிச்சுட துடிச்சாங்க
மறக்காம பேசி துடிக்க வச்சாங்க
காரியம் முடியுரத்துக்கு மின்னால
கதவ ஒடச்சு நொழஞ்ச வாத்யாரு


பொரட்டி எடுத்தாரு பேமனிகள
பொத்தி அணச்சாரு குட்டியத்தா..
கற்பூரம் ஏத்தி கும்பிட்டே நானு
கையிலே பச்ச குத்தி கிட்டேன்


அப்புறமா தா தெரிஞ்சுது அவனுகள
அவகிட்ட அனுப்சு வெச்சது அவரு
அடிக்கு அஞ்சு ரூபா ஒதையும் ஒரு
நடிப்புன்னு அப்பதான் நல்லா புரிஞ்சது


திரையில நாயகரெல்லாம் வாள்கையில
தினுசா திரிய, சினிமா ரவுடி மாலபோட்டு
சபரி மல ஏறுறான் சாமிய கும்புடுறா
சட்டுனு ஒரு விசயம் பொறி தட்டுது


அடிக்கிறது மட்டு தலைவன் தகுதி
அடி வாங்குறது தொண்ட தலவிதி
அடி வாங்குறவ திருப்பியடிக்க சொல்ல
அப்போ மாறுது நாட்டோட தலவிதி!!!

No comments: