இருபது இருபத்தொன்று என்று
ஒரு ஆண்டு நேற்றோடு முடிந்து
இருபது இருபத்திரண்டு இன்று
வருகிறது புத்தாண்டாக சிறந்து
களங்கமில்லா தேதி மாதமென
விளங்கவரும் ஒன்றும் ஒன்றும்
அளவில்லாத அரிய வாய்ப்புகள்
உளமார உழைப்பவருக்கு தந்து
இரண்டு சுழியம் இரண்டிரண்டில்
புரண்டு படுத்துறங்காமல் எழுந்து
புத்துணர்ச்சியுடன் கடமை செய்து
அத்துடன் அடுத்தவர் துன்பத்தை
பரிவுடன் பணிவுடன் பண்புடன்
அறிந்துணர்ந்து துயர் களைந்து
செறிவான நிறைவான இலக்கு
தெரிவு செய்து சாதிக்க வாழ்த்து
No comments:
Post a Comment