எட்டாக்கனிகளுக்கு ஏங்கி
கிட்டாதவை பற்றி எண்ணி
கொட்டாவி விட்டோம் நாம்
நமக்கு விதிக்கப்படாத பல
நல்லூர் கனவு தேசங்களை
நமது பயணத்திட்டங்களில்
வைத்து நிறைவேற முடியாத
இத்துப்போன கானல் நீராம்
செத்துப்போன நினைவுகள்
சுமந்து எதிர்பார்ப்பு எதுவும்
கடந்து போன காலத்தினில்
நடந்து நிஜமாகவில்லையே
என்கின்ற மாயையில் சிக்கி
எமது ஆன்மாவை ஆவியை
என்றும் வலிக்க சிறையிட்ட
தவற்றை சரி செய்யும் வழி
காற்றாய் நிரம்பியே வழியும்
அவற்றை மன்னித்து விடல்
மக்கிப்போன எண்ணங்கள்
மனக்கதவு திறந்து வைக்க
தனது வழி பார்த்து அகலும்
இப்போது இருப்பது சுத்தமான
இதயக்கோவில் அதில் அழகிய
புதிய ஓவியங்கள் தீட்டிடுவோம்
போதும் என்ற மனமே பொன்
செய்யும் மருந்தாய் யதார்த்தம்
உணர்ந்து அறிந்து மகிழ்வோம்
நன்றி: சூஸன் ஃப்ரைபோர்ட்
No comments:
Post a Comment