பயம்
(தமாம் பாலா)
கடலில் கலக்குமுன்
கலங்கியது நதியும்
கடந்து வந்த பாதை
கண்ணில் தெரிய
சிற்றாறாய் மலை
சிகரங்களில் ஊறி
நகரங்கள் தாண்டி
நடுவில் வளைந்து
வந்த நதி முன்னே
பரந்து விரிந்ததாய்
பெருங்கடல் அதில்
சிறு துளியாகிடும்
பயம் கொண்ட நதி
சுயம் தொலைக்க
தயங்கியே நின்றது
இயலாமை மிகுந்து
நதிக்கு மட்டுமல்ல
நமக்கும் இருப்பது
திரும்பிட முடியாத
ஒரு வழி மட்டுமே
அழியாத நதிகள்
கழிமுகம் சேரும்
கடலுடன் கலக்கும்
கடலாகவே மாறும்
(நன்றி: கலீல் கிப்ரன்)
No comments:
Post a Comment