சுழி
தமாம் பாலா
ஆற்று நீரில் கண்ட சுழி
விரலின் ரேகையில் சுழி
தலைவகிட்டில் வந்த சுழி
ஏட்டின் தொடக்கமும் சுழி
என்றார் கோட்டுடன் சுழி
சேர்ந்த உகரம் முதல் சுழி
ஏன் எழுத வேண்டும் சுழி
எதற்கு தோன்றியது சுழி
எப்படி வந்திருக்கும் சுழி
தும்பிக்கையும் ஒரு சுழி
துதிப்பாடலும் கூட சுழி
துணையாம் இந்த சுழி
எண்ணின் முதலும் சுழி
எழுத்தின் வடிவமும் சுழி
எல்லைகள் கடந்த சுழி
எப்போதும் போலவே சுழி
மறந்து எழுதிய பின் சுழி
சேர்த்தேன் மேலாக சுழி
No comments:
Post a Comment