November 15, 2018

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்
தமாம் பாலா

பூக்கள் பலபல வண்ணங்களில்
பூத்து சிரித்தன வாசனையுடன்
நான் குழந்தையாய் இருந்தபோது

காற்றும் தென்றலாய் மெல்லவே
வீசியது என் உடலைத் தழுவியது
நான் குழந்தையாய் இருந்தபோது

வானம் பகலில் ஒரு நீல கடலாய்
மேக ஓடங்கள் மிதந்து சென்றன
நான் குழந்தையாய் இருந்தபோது

கடலின் அலைகள் வந்து என்னிடம்
கை குலுக்க முயன்று கால் தொட்டன
நான் குழந்தையாய் இருந்தபோது

பூவுக்கும் காற்றுக்கும் வானுக்கும்
கடலுக்கும்  குழந்தைகள் தினமோ
நான் குழந்தையாய் இருந்தபோது

No comments: