September 23, 2018

கதை

கதை
தமாம் பாலா

ஒரு ஊரில் ஒரு பாட்டியும்
கருகாமல் சுட்ட வடையை
கருங்காக்கை கொத்தியே
பெருமரத்தின் உச்சியிலே

பறந்து போய் உட்கார்ந்தது
ஆற அமர தின்னலாமென
மரத்தின் கீழே நின்றிருந்த
அரக்கு நிறக் குள்ளநரியும்

இதுதான் நல்ல சமயமென
புது நட்புடன் வந்து காகமே
மதுரம் உன் குரலில் கானம்
அதுவே எனக்கும் வேணும்

என்றிடவும் ஏமாளிக்காகம்
தன் வாயைத் திறந்திடவே
பொன்னிற வடை போனது
சொன்ன நரியின் வசமாய்

திருடும் காகமும் ஏமாற்றும்
குறுநரியும் எந்த வகையில்
தரும் நீதி போதனையென
வருங்காலத்தின் சந்தேகம்

உழைத்துப் பிழைப்பவரை
உரசிப் பிழைப்பது ஒட்டாது
உடம்பில் எத்திப் பெற்றதும்
உடன் எளிதில் மறையுமாம்

No comments: