June 7, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 1.
தமாம் பாலா                                                                                For Audio Please Click Here



“தலைவரே! வர்ற வெள்ளிக்கிழமை நாம எல்லாரும் ஸா..பா.. போறோம். துணிமணிய பேக் பண்ணிடுங்க; சைனா பாடர் வரைக்கும் போகவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கேன்”- அண்ணன் மணி அவர்கள் சொன்னதை கேட்ட போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது!
சுற்றுலா சொர்க்க பூமியான வியட் நாமுக்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகுது; இன்னமும் ஆபீஸ்/வீடுன்னு இருக்கோமேன்னு நினைச்சப்போ, ஸா..பா.. பயணம் வந்துடுச்சு. அது என்ன ஸா...பா..?? நம்ப மக ஆஷிகா பாட்டு கத்துக்கிட்ட சரளி வரிசை மாதிரி இருக்கேன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஆசையாகவும், ஆர்வமாகவும் வெள்ளி வரைக்கும் ஓட்டிடலாம்னு இருந்த போது, புதன் கிழமை திடீர்னு, எதோ ஒரு உணவு ஒவ்வாமை ஆகி (அது என்னவோ, ஃபுட் பாய்ஸனாமே) ஆபிசுக்கு மட்டம் போட்டாச்சு. தட்டு தடுமாறி, ஃபாமிலி மெடிக்கல் போய், டாக்டரை பார்த்தேன். அவர் ஒரு இஸ்ரேலியர். வெள்ளை கோட் போடாமல், எம்.ஜி.யார் பாணி சிகப்பு சட்டையில் பழம் மாதிரி இருந்தார். மருந்து வாங்கிட்டு, “ஸா பா போகலாமா ஐயா?”ன்னேன். “அது நாளைக்கு, உன் உடம்பு உள்ள நிலையை பொறுத்த்துன்னாரு அவரு. அதுவும் சரிதான், அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.

மருந்து புண்ணியத்திலே, வெள்ளி மாலை பெட்டி படுக்கையோடே நண்பர்கள் கூட்டமா கிளம்பிட்டோம். ஒரு பெரிய டொயட்டா இன்னோவா டாக்ஸியை பிடிச்சுட்டோம்; ரயில் நிலையம் போயிடலாம்னுதான் தோணிச்சு. ஆனா வியட் நாமி ஓட்டுனர், பாஷை பிரச்சினையாலே மக்கர் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஆளுக்கு ஆளு புரிய வைக்க முயற்சி செய்ய, நானும் “கூஊஊ...சிக்கு சிக்குன்னு” அதிரடியா இறங்கியும் ஒண்ணும் பலிக்கலே!


ஒரு வழியா ‘டூர் ஏஜண்டுக்கு மொபைல் போட்டு, டாக்ஸி ட்ரைவர் காதிலே வச்சு, ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தள்ளிட்டு போய்ட்டோம். கா- ஹனாய், அசப்பிலே நம்ம ஊர் ஸ்டேஷன் மாதிரியே இருந்தது. ப்ளாட்ஃபார்ம் தான் தரையோடு தரையா, கம்பார்ட்மெண்ட் உள்ளே போக ஏணி வச்சமாதிரி ஏற வேண்டியிருந்தது. ஸ்டேஷன் பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தாலும், வண்டியும் கோச்சும் வீடு மாதிரி, நல்லாவே இருந்தது.



சரியா இரவு 9:10 மணிக்கு ரயில் புறப்பாடு; நாங்க தான் கடைசி பெட்டி. பெரிசுங்க மணி, ரவி தவிர இளசுங்க ராம்கி, சுரேஷ் மற்றும் ரெண்டுங்கெட்டானா, அரவிந்தும் நானும்; ஆக மொத்தம் ஆறு பேரும் அரட்டை கச்சேரியை தொடங்கிட்டோம். பேச்சு சுத்தி சுத்தி ஆபீஸ் வேலை பத்தியே இருந்தது, அதுக்கு வெளியே வரும் போது, தூக்கம் கண்ணை சுத்த, அடுக்கு படுக்கையிலே நுழைஞ்சுக்கிட்டோம். மீட்டர் கேஜ் ரயில் தாலாட்டுற மாதிரி இல்லாமே, தாறுமாறா அலைபாய்ஞ்சு, வயித்தை கலக்கிட்டு ஓடிக்கிட்டிருந்துச்சு, காலை 5:00 மணிக்கு, லோ-காய் ஸ்டேஷன் வர்ற வரைக்கும்!




ஸா..பா.. தொடரும்...

3 comments:

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள். அருமை!

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க‌ ராம‌ல‌க்ஷ்மி!
கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளும் இருக்கு. ஒண்ணு ஒண்ணா எடுத்து விட‌லாமுன்னு இருக்கேன் :-)

ராமலக்ஷ்மி said...

செய்யுங்க:)! ஆவலுடன் காத்திருக்கிறேன்.