August 1, 2018

தாவணி

தாவணி
தமாம் பாலா

பட்டுப் பாவடைக்கு பத்து
வயதிருக்கும் பாவாடை
தாவணி பதினாறு வயது

புடவை சேலைக்கு அகவை
இருபதும் அதற்கு மேலும்
ஆடைகளுக்கே ஆகின்ற

வயதுகள் ஒரு போதுமே
ஆவதில்லை யுவதிக்கு
அவள் என்றும் குழந்தை

அதனால் தானோ அவள்
அகழ்ந்தெடுத்த மரமாய்
அடுத்த வீட்டில் பூப்பதும்

No comments: