November 19, 2017

நான் யார்?

நான் யார்?
(தமாம் பாலா)

பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன்
வேலிக்கும் சாட்சி
சொல்லும் ஓணான்

மூன்றுகால் முயல்
பிடித்த முரட்டு உடும்பு
நேரம் பார்த்து பலபல
நிறம் மாறும் பச்சோந்தி

பசுத்தோல் போர்த்திய
பதுங்கிப் பாயும்புலி
எதுவுமே நானில்லை
என்றால் நான் யார் ?

No comments: